கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Saturday 12 September 2015


மறக்க முடியாத பள்ளிகால வாழ்கை:-
1. முதன் முதலில் பள்ளிக்கு செல்லும் முன் அழுதது
2. வாத்தியாருக்கு வேணும்னே சீக்கி்ரம் உடைஞ்சு போற மாதிரி குச்சி தர்றது
3. வீட்டு பாடம் எழுதாமல் மறுநாள் ஆசிரியர் கிட்ட அடிவாங்கினது
4. வாத்தியார் அடிக்கும் குச்சியை ஒழித்து வைத்தது
5. பள்ளிக்கு போக மாட்டேன் என்று சொன்னதுக்காக அப்பா அடித்தது
6. மாலையில் பள்ளி விட்டதும் சத்தம் போட்டுகொண்டு ஓடியது
7. வாரத்தின் முதல் நாள் (திங்கள் கிழமை ) அன்று அடுத்த சனி கிழமை, ஞாயிறு கிழமை எப்ப வரும் என்று காத்திருப்பது
8. காலண்டரில் இந்த மாதம் எத்தனை அரசு விடுமுறை வருது என மாதந்தோறும் பார்ப்பது
9. வருசம் புல்லா படிக்காம ஊர சுத்திட்டு, பரிட்ச்சைக்கு ஒரு நாள் முன்னாடி அவசர அவசரமா எத படிகரதுனே தெரியாம முழிச்சது
10. இருக்குரதுலயே அதிக பக்கங்கள் இருக்கிற புக்க வெச்சு 'புக் கிரிக்கெட் ' விளையாடுறது .
11. பிறந்தநாள் லீவு அன்னைக்கு வருதேன்னு வருத்த பட்டது.
12. வட்டம் போட காம்பஸ் இருந்தும் பக்கத்து பெஞ்சுல இருக்க பொண்ணுகிட்ட வளையல் வாங்குறது
13. பள்ளிக்கு செல்லும் முன் அப்பா காசு கொடுப்பாரா இல்லையா என எதிர் பார்த்தது
14.. சில்லறைக் காசு கையளவில் ...சந்தோஷமோ கடலளவில்
15. பரிச்சையில் முதன்முதலில் பிட் அடித்தது
16. முதன்முதலில் பள்ளியை கட் அடித்துவிட்டு நண்பர்களோடு ஊர் சுற்றியது
17. முழுஆண்டு தேர்வின் கடைசி பரிச்சை அன்று சட்டையில் மை (இங்) அடித்து மகிழ்ச்சியை வெளிபடுத்தியது

18. ப்ளாக் போர்டுக்கு கரி பூசும் நாளை திருவிழா போல கொண்டாடுவோம்
19. சட்டையை டக் இன் செய்து, அரைஞான் கயிற்றை பெல்ட்டா யூஸ் செய்வது
20. யாராவது பேசுனீங்க போர்ட்ல நேம் எழுதி வெச்சிருவேன் -மிக அதிகம்,மிக மிக அதிகம் ..
21. நண்பர்களிடம் சாப்பாட்டை பகிர்ந்து உண்பது
22. முதல் லவ் லெட்டர் எழுதியது

No comments:

Post a Comment