கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Sunday 16 August 2015


தேவதை

உன்
பெற்றோரை நான் பார்த்ததுண்டு
அவர்கள் மனிதர்கள்தான் ....!
ஆனால்
நீ மட்டும் எப்படி
தேவதையானாய்...!
காதலுக்கு கண் இல்லை
என்பது பொய்
உனது கண்களை
பார்த்தபிறகு தான்
உன்னை காதலிக்கவே
தொடங்கினேன்...
உன்னை
யார் மலர் கண்காட்சிக்கு
போக சொன்னது ?
இப்போது பார் எல்லா மலர்களும்
உன்னோடு வர
துடிக்கின்றன
என்னை பார்க்கும்
ஒருநொடியில்
என்னிடமிருந்து எல்லாமே
எடுத்து செல்கிறாய்
போகும் வழியில் விட்டு செல்கிறாய்
அனாதையாக
நீயின்றி நானும்
என் மனமும்
எங்கேனும் சிதறும் 
சிரிப்பின் சத்தங்களில் எல்லாம் 
மீண்டும் உன் ஞாபகங்கள் 
என் இதயத்தை நிரப்பி செல்வது 
வாடிக்கையாகிப்போனது எனக்கு .....................


அதிபன் அகல்யா ................

No comments:

Post a Comment