கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Wednesday 19 August 2015

கண்ணர்த்துளிகள்
உன் கண்ணீர்த்
துளியைத்
துடைத்துவிட்ட
என் கையில்
கவிதை
பிசு பிசுத்தது
உன்
கை பிடித்துக்
கொண்டு
வீட்டுக்குப்
போகவேண்டும்
என்று நினைத்துதான்
நடந்தேன்
தெரியாத்தனமாய்
சொர்க்கத்துக்குப்
போய்விட்டேன்
காதலிப்பதைவிட
காதலிக்கப்படுவதிலேயே
அதிக சுகம்
அந்த சுகத்தையே
உனக்குத் தர
விரும்புகிறேன்
எல்லோரும்
கைபேசியில்
பேசுவார்கள்
நீ மட்டும்
கண் பேசியில்
பேசுகிறாய் ...
குழந்தைகள்
அம்மா அப்பா
விளையாட்டு
விளையாடுவதைப்போல
நாம்
காதலன் காதலி
விளையாட்டு
விளையாடவேணும்
என் நெஞ்சில்
சாய்ந்துகொண்டே
`என்ன உங்கள்
இதயம் துடிப்பது
கேட்கவில்லையே ?`
என்கிறாய்
அது எப்படித்
துடிக்கும் உனக்கு
வலிக்குமே !
நான் தேவதையோடு
வாழப்பிறந்தவன்
அதனால்
உன்னை விட
எந்தப் பெண்ணோடும்
என்னால்
வாழ்ந்துவிட முடியாது
என் ஆசை
எல்லாம் ஒன்றுதான்
தனக்கு
இப்படி ஒரு
கணவன்
கிடைக்கவில்லையே
என்று
எல்லாப்பெண்களும்
பொறாமைப்படும்
அளவுக்கு ஒரு
நல்ல கணவனாய்
உனக்கு நான்
இருக்கவேண்டும்
எதிர்பாராத
தருணத்தில்
நடக்கிற விபத்து
காதல்...
இரண்டிலும்
முடிவு
மரணமாகக் கூட
இருக்கலாம்.....

உன்னுள் ஒருவனாக....

No comments:

Post a Comment