கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Saturday 15 August 2015

           https://youtu.be/ASrqUe0ciwQ                                                            தீபாவளி

அதிகாலை எழுந்ததும்
ஆசை முகத்துடன் ஓசை நயம் கண்டு 
ஒய்யாரமாய் நடைநடந்து
வாசல் வெளியில் சென்று
வண்ண வண்ண
வான வெடிகளை
பார்த்தபடியே
கொஞ்சும் மழலை
முகத்துடன்
முகம் நோக்கின் தாயின்
வாய்மொழியில்
தலைமுதல் பாதம்வரை
தழுவிடும்
மூவண்ண எண்ணையில்
முத்து குளியல் கண்டு
முழுமுதற் கடவுளின்
வரம் பல கொண்டு
புத்தாடை மேனியிலே
புதுபுது ரகத்துடன்
அணிகலன்கள் பூட்டி
அன்னையின் ஆசிர்வாதத்துடன்
இனிப்புகள் உண்டு
வெடிக்கு வெடி சத்தத்தில்
வெள்ளை மனதும்
கொள்ளை கொள்ளும்
இரவில்
மனதில் இருக்கும்
இருட்டை விலக்கி
வெளிச்சம் கொண்டு
வாழ்வதே தீபாவளி திருநாள்






அசுரன் அழிந்து
ஆனந்தம் கிடைத்ததை போல
நம் வாழ்வில் உள்ள
எல்லா தடை கற்களும்
படிகற்களாக மாறி
துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் மலர
தித்திக்கும் திருநாளாம்!
தீபாவளி ஒரு நாளாம்!
தீப்பொறிகள் விளையாடும்
திரும்பிய திசையெங்கும்.
வருடத்தில் ஒரு நாளாம்!
வசந்தத்தை தரும் நாளாம்!
வான வேடிக்கையை பார்த்து
வருத்தத்தை மறந்திடுவோம்.
ஒளிவீசும் திருநாளாம்!
ஒலி கேட்கும் ஒருநாளாம்!
ஓயாமல் வெடித்திடுவோம்-இவ்
ஒருநாளில் துன்பம் மறந்திடுவோம்.
புத்தாடை உடுத்திடுவோம்!
புன்னகையில் ஜொலித்திடுவோம்!
கவனத்துடன் வெடித்திடுவோம்
கலைப்பின்றி மகிழ்ந்திடுவோம்...
https://youtu.be/ASrqUe0ciwQ

No comments:

Post a Comment