கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Sunday 16 August 2015


 என்னுடைய நிறைவேறா ஆசைகள் 



                                 


உன் கை பிடித்து கடலோரம் நடக்கவும் 
உன் மடிமீது தலை சாய்த்து தூங்கவும்
என் கவிதைகளை படித்து நாம் இருவரும் இரசிக்கவும்
நீ என் மர்பில் சாய நான் உன் தலை கோதவும்
உன் காதோரம் முடி விலக்கி முத்தமிடவும்
நீ என் காதை கடிக்கவும்
என் கவிதைகள் உள் காதில் சொல்லவும்
உன் அழகை சொன்ன என் கவிதை கேட்டு நீ நாண
உன் வெட்கத்தை அள்ளிப்பருகவும்
நீ என் தோளில் சாய்ந்து கொள்ள
உன் முதுகில் விரல்களால் கோலம் போடவும்
உன் மார்பின் சூட்டில் நான் துயில் கொள்ளவும்
உன் கண் பேசும் கவிதைகள் வாசித்து காதில் பதில் சொல்லவும்
உன் உறங்காத ஏக்கங்களை தாலாட்டு பாடி தூங்க வைக்கவும்
உன் தலையணையை நான் எடுத்துவிட்டு
என் மடியையே தலையணையாக்கி தரவும்
உனை என் மடிமீது போட்டுக்கொண்டு
ஒரு குழந்தை போல் உன் கன்னம் கிள்ளவும்
உன் பாதம் எடுத்து என் மடி மீது வைத்து
உன் காலில் கொலுசு மாட்டி அழகு பார்க்கவும்
நீ ஜன்னல் வழியே அழகை இரசிக்க
நான் பின்னால் வந்து இடுப்போடு சேர்த்து
அணைத்துக்கொள்ளவும்
நீ சரிந்து படுக்கும் போது உன் மெல்லிடை மேல்
என் விரல்களால் நடந்து போகவும்
நான் இரு கையாலும் உன் முகம் பிடித்து
உன் கண் மயங்கிய முக வெட்கத்தை இரசிக்கவும்
என் கையை எடுத்து உன் கையில் வைத்து
நான் உனக்கானவன் என்று சத்தியம் செய்யவும்
நீ எனக்கு எப்போதும் என்னருகில் வேணும்மடி செல்லம் ...!

அழகான ராட்சஷி...............

No comments:

Post a Comment