கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Sunday 16 August 2015



                                     என்னவளின் குறுஞ்செய்தி (Msg)

             



தூங்கும் முன்பும்
தூக்கத்தின் நடுவிலும்
எழுந்ததும்
குளித்ததும்
சாப்பிட்டதும்
அலுவலகம் செல்லும் முன்பும்
செல்லும் வழியிலும்
சென்ற பின்னும்
வேலையினிடையேயும்
அலைபேசியை எடுத்துப்
பார்ப்பது வழக்கம்
உன் குறுஞ்செய்திக்கும்
அழைப்பிற்கும்
ஏங்கித் தவிக்குமென்
மனதிற்கு ஒரே ஆறுதல்
இன்னும் பத்திரப்படுத்தியிருக்கும்
ஆறு மாதத்திற்கு முன்
உன்னால் அனுப்பப்பட்ட
‘Good Night"
எனும் குறுஞ்செய்தி....

No comments:

Post a Comment