நீ வரும் பகலை எதிர் பார்த்து பார்த்து
எத்தனை இரவுகள் என்
விழிகள் தூங்காது
கண்ணீர் வடிக்கின்றது
தெரியுமா ???
... வாழ்வு விடியும் நாளுக்காய்
காத்திருக்கவில்லை என் நாட்கள்
வாழ்வு முடியும் நாளுக்காகவே
காத்திருக்கின்றன ........
நாம் நடக்கும் போது
கூடவே வரும் மேகமாய்
நான் எங்கு சென்றாலும்
என்னுடனே நினைவாய்
வந்திடும் ஒரு நொடிப்பொழுதில்
நீ எனக்கு தொலை பேசியில்
அழைத்து உன்னில் என்னை
தொலைத்த நிமிடங்கள் ..........
ஒரு பார்வை
ஒரு ஸ்பரிஷம்
ஒரு கண்ணீர்
ஒரு புன்னகை
ஒரு முத்தம்
ஒரு ஜனனம்
ஒரு மரணம்
இத்தனையும் உன்னை
காணும் அந்த நொடியில்
நிகழ்ந்தால் போதும்
என் இந்த ஜென்மத்துக்கு ....
வருவாய் என .............
No comments:
Post a Comment