கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Sunday 16 August 2015


அம்மாவின் கடைசி மடல் 

அன்புள்ள மகனுக்கு குறையாத பாசத்துடன்
நடைபாதையிலிருந்து உன் அம்மா
எழுதுவது... !
நீயும் உனது குடும்பமும் நலமா ?
அன்று உனக்கு வாழ்கையை கத்துகொடுத்த
அதே அன்போடும் பாசத்தோடும் - இந்த
மடல் எழுதுகிறேன்..!

இக் கடிதத்தை உன் பிள்ளைகளுக்கு
தெரியாமல் படி..!
உன் மனைவியோ நீயோ நாளை
இப்படி எழுதாமலிருக்க..!
உனக்கு சாபம் விடுவதோ ...!
என் கஷ்டங்களை சொல்வதோ..!
உன்னிடம் உதவி கேப்பதோ..!
இக்கடிதத்தின் நோக்கமல்ல..!!!
உன்னை பெற்றெடுத்தவளின் கடைசி ஆசையை
காது கொடுத்து கேப்பாய்
என்ற நம்பிக்கையில் வரைகிறேன்
இந்த மடலை ...!
சுவர்கோழி கத்தும் போதும்..!
காகம் கரையும் போதும்...!
கதவுகள் ஆடும் போதும்...!
விக்கல் வரும் போதும்...!
என்னை நினைத்து சந்திக்க வருவாய் என
காத்து கொண்டிருக்கிறேன் .
ஒவ்வொரு நாலும்
சில பல நாட்களாக
உடல் நிலை மிக மோசம் அடைந்து விட்டது ...
நன் இறந்த பிறகு ..
உன் கையால் கொல்லி வைக்க வேண்டும்...!
தயவு செய்து என் தலையில்
வைக்காதே ...!
என் நெஞ்சில் வை...!
உன்னைப்பற்றிய நினைவுகள்
அங்குதான் அதிகமாய் இருக்கிறது...!
அதை சுமந்து சுமந்து நான் கூனாகி
கூட போகிவிட்டேன்...!
எதற்கும் பயன்படாத
அந்த நினைவுகள் சாம்பலாகி
உரமாகட்டும் வரும் தலைமுறைக்கு..!
பெற்றெடுத்தவலை தனியாய்
தவிக்க விட கூடாது என்று...!
உன்னைப்பற்றிய நினைவுகள் உள்ளுக்குள்
எரிமலையாய் பொங்குவதை ....!
கண்ணீர் துளிகள்பட்டு தீக்காயம்
படுவதை இப்போதுதான் பார்க்குறேன் ...!
கையேந்தி காத்து கிடக்கிறேன்
ஒரு வேலை உனக்காக ...!
இதற்க்கு பதில் கடிதம் எழுத நினைத்தல்
அந்த கடித்தை சோற்று பருக்கையால் ஒட்டு
அதாவது என் பசியை ஆற்றட்டும் ...!
அன்புடன் ...
என்றும் நீ நலம் வாழ
வேண்டும் உன் அன்பு தாய்


          அதிபன் அகல்யா .................

No comments:

Post a Comment