கூழாங்கல்லாய்

காவிரி ஆற்றின் கூழாங்கற் குவியலில்
நானும் ஒரு கூழாங்கல்லாய்.............

மறக்காத மனங்கள்
மகிழ்வோடு பயணிக்க...........

Sunday 16 August 2015

அழகான ராட்சஷி திருமணத்திற்கு பிறகு 



உன்னிடமிருக்கும்
ஆடைகளின்
நிறங்களும் வடிவங்களும்
எனக்கு
அத்துப்படி.
எந்த தினங்களில்
நீ
எந்த ஆடை அணிவாய் என்பதையும்
எந்த ஆடைக்கு
எந்த
காதணி அணிவாய் என்பதையும்,
எந்தக் காதணிக்கு
எந்தக்
காலணி அணிவாய் என்பதையும்,
துல்லியமாய்ச் சொல்லிய
காலங்கள்
உண்டு.
நீண்ட வருடங்களுக்குப்
பின்
ஆக்ரோஷிக்கும் ஆனந்தத்துடன்
உனக்குத்
தொலை பேசுகையில்.(தொலை பேசியில் பேசுகையில்)
குழந்தை அழுகிறது
பிறகு பேசலாமா
என்ற
உன் குரலின் ஆடையையும்
புரிந்து கொள்ளாமல்
போய்விட முடியவில்லை
என்னால்...!!!!..........................................

என்றும் உன்னை மறவாதவனாய்.............

No comments:

Post a Comment